சிலாபம் பகுதியிலிருந்து, கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 19 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு ஒன்றுக்கு செல்ல இவர்கள் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இடத்திலிருந்த வான் ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர்களை கைது செய்ததாகவும், கைதானவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, பொலனறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிகடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
