கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உதயதேவி ரயில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து

கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றுக்கிடையிலான ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்சு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உதயதேவி ரயில்  டிப்பர் வாகனத்துடன் மோதி  இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த  ரயில்சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி சிகிச்சைகளுக்காக  வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை