கொரோனா அனர்த்தத்தினால் பயணத்தடை கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கிணங்க உணவு வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள யாசகர்கள் பலர் உணவு இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.
நேற்று மாலை செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அணுகிய யாசகர்கள் உணவின்றி சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கு இணங்க கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான அன்பு முகைடீன் ரோசன் அக்தர் பயணத்தடையினால் நிர்க்கதியான இப்பகுதியிலுள்ள 20 யாசகர்களுக்கு உணவுகளை வழங்கி வைத்துள்ளார்.