யாழில் மின்னல் தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கரவலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஒருவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் இன்று (23)மதியம் 12:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதில் இறந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் என இனங்காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை