யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கரவலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஒருவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் இன்று (23)மதியம் 12:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதில் இறந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் என இனங்காணப்பட்டுள்ளார்.