அம்பாறை - சாய்ந்தமருது காவல்நிலைய பிரிவில் உள்ள, சாய்ந்தமருது பகுதியில் வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
81 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரின் தலைப்பகுதியில் காயம் ஒன்று காணப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.