பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு தவிர்க்க முடியாத காரணத்தினால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) மேற்படி நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
