யாழில் - பாதிரியார் தலைமையிலான குழு அடாவடி!



யாழ்ப்பாணம் இருபாலை கானான் சிறுவர் இல்லத்தில் 80 வயது போதகரால் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக வெளியான தகவலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செய்தியை வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பல் ஒன்று யாழில் தனியார் பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின் தலைமையிலான கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த வயோதிப பெண் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், போதகர் , அவரது மகன் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் இன்றைய தினம் யாழில் வெளிவரும் தனியார் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.

தனியார் பத்திரிகை நிறுவனம் மீது தாக்குதல்
இந்நிலையில் அச்சுவேலியில் இருந்து தமது சபைக்கு சொந்தமான சொகுசு பேருந்து மற்றும் பட்டா வாகனம் என்பவற்றில் கும்பல் ஒன்று யாழ்.நகர் பகுதியில் உள்ள குறித்த பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்து, அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடவாடியில் ஈடுபட்டதுடன், நிறுவனத்தில் வேலை செய்தவர்களையும் தமது கையடக்க தொலைபேசிகளில் வீடியோ, புகைப்படங்கள் எடுத்தும் அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு குறித்த பத்திரிகை நிறுவனத்தினர் அறிவித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தர முதல் அக்கும்பல் தமது சொகுசு பேருந்திலும் பட்டா வாகனத்திலும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து குறித்த பத்திரிகை நிறுவனத்தினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதியது பழையவை