ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் - இரா.சம்பந்தன் அதிரடி அறிவிப்பு!



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் (R. Sampanthan) தெரிவித்துள்ளார்.

அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் 
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்ககையில்,  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது.


அத்துடன் குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை. தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழுவதற்காக ஆணையை வழங்கி வந்துள்ளார்கள்.

அவ்விதமான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை.


தென்னிலங்கை அரசியல் கட்சிகள்
அதேநேரம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம்.

புதியது பழையவை