அரசாங்க நியமனம் இன்றி அவதியுறும் சுதேச மருத்துவ பீட பட்டதாரிகள் - இரா.சாணக்கியன் தெரிவிப்பு!



இலங்கையில் சுதேச மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றவர்களில் நாடளாவிய ரீதியில் சுமார் 1650 பட்டதாரிகள் அரசாங்க நியமனம் இன்றியும் எதிர்காலமும் இல்லாமல், அவர்கள் அன்றாடம் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்று(01.04.2024) பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போதே கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் வேலை விசாவிற்கு காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நெருக்கடி
ஐரோப்பிய நாடுகளில் வேலை விசாவிற்கு காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நெருக்கடி
மருத்துவர்கள் பற்றாக்குறை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுதேச மருத்துவத் துறையானது ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி ஆகிய மூன்று துறைகளையும் உள்ளடக்கியது. சித்த மருத்துவப் பாடத்திட்டத்தில் 5 ஆண்டுகள் இளங்கலைக் கல்வியும் அதன்பின் ஓராண்டு இன்டர்ன்ஷிப்பும் (internship) உள்ளது.

எவ்வாறாயினும் உண்மையில் முடிவடையும் நேரத்தில் 7- 8 ஆண்டுகள் வரை நீடித்து செல்கின்றது. இவர்களது அறிவு, திறமை மற்றும் சேவைகள் நாட்டுக்கு பயன்படாமல் வீணடிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், பல ஆயுர்வேத மருத்துவமனைகள் மருத்துவர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றன, மேலும் பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்க முடியவில்லை.

இதுதவிர, பொதுமக்கள் பலர் தங்களை ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் என்று கூறிக்கொள்ளும் போலி நபர்களை அணுகி வருகின்றனர். இதன் விளைவாக, அவர்கள் கடுமையான உடல்நலச் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள், மேலும் இது நமது பாரம்பரிய சுதேச மருத்துவத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டுவருகிறது.

பில்லியன் கணக்கான டொலர் வருமானத்தை இழந்த இலங்கை
பில்லியன் கணக்கான டொலர் வருமானத்தை இழந்த இலங்கை
இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள்
மூலிகைத் தோட்டம் மற்றும் மருத்துவம் தயாரித்தல் ஆகிய துறைகளில் இவர்களிடம் உள்ள பயிற்சி மற்றும் அறிவு மற்றும் இவற்றோடு சம்பந்தப்பட்ட திறன்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

மற்றும் நாட்டில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்கு இத்துறையை மேம்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியும். இந்த பட்டதாரிகளில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே அரசாங்கத்தால் நியமனம் பெறுகின்றனர்.


யாராவது பணியில் இருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே மற்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றால், இவர்களில் பெரும்பாலோர் எப்போதும் இந்தத் துறையில் வேலையில்லாமல் இருப்பார்கள்.

இந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட சித்த பட்டதாரிகள் கடந்த பல வருடங்களாக நிரந்தர வேலை கிடைக்காமல் உள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை