மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு நேற்று(15.08.2025) மாலை இடம் பெற்றன.
இவ்வாலய உற்சவம் மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாலய உற்சவம் கடந்த (08.08.2025)ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி,நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025)ஆம் திகதி தீமிதிப்பு பக்தி பூர்வமாக இடம் பெற்றன.
இதனைக் காண மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.