24 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 பேர் அடங்கிய குழுவொன்று மாவனெல்லை, போவெல்ல பகுதியிலுள்ள மாஓயாவில் நீராட சென்றுள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.