வைத்தியசாலையில் 22 வயது யுவதி மீது பாலியல் சேட்டை


மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பெண்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறும் விடுதியிலுள்ள பெண்நோயார் ஒருவருக்கு உதவிக்கு இருந்த யுவதி ஒருவர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த சிற்றூழிர் ஒருவரை கைது செய்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

குறித்த வைத்தியசாலையில் சிற்றூழியராக பணிபுரியும் 48 வயதுடைய மீராவோடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை பெண்கள் விடுதிக்குச் சென்று அங்கு நோயாளர் ஒருவருக்கு உதவிக்காக அங்கிருந்த 22 வயது யுவதி ஒருவர் மீது பாலியல்சேட்டை விட முயற்சித்துள்ளார்

இதனையடுத்து குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சிற்றூழியரை பொலிசார் கைது செய்ததுடன் அவர் கடமை நேரத்தில் மது பாவித்துவருவதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
புதியது பழையவை