வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 13 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு மகத்தான சாதனை படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இருந்து பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டள்ளமை இதுவே முதன் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.