யாழ்ப்பாண நகர பகுதியில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த குருநகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபரே யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபருக்கு ஏற்கனவே நீதிமன்ற பிடியானை உள்ள நிலையில் குறித்த நபர் தொடர்பில் யாழ் ப்பாண போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது அவரது வீட்டிலிருந்து 14 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 14 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிவானிடம் முன்னிலைப்படுத்த படவுள்ளார்