மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் மூன்றாம் அலை காரணமாக இறப்பு வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று( 11 )மாலை தொடக்கம் மருந்து விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரத்திற்குள் மக்கள் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் மாநகர முதல்வர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.