பலத்த மழையுடனான வானிலை தொடரும்


நாட்டின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மழையுடனான வானிலை தொடருமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
புதியது பழையவை