பன்குடாவெளி சவக்காலையொன்றில் ஆயுதங்கள் தேடும் பணி!


மட்டக்களப்பு- பன்குடாவெளி வயற்பிரதேசத்திலுள்ள தனியார் சவக்காலையொன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலொன்றையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் கரடியனாறு பொலிஸாரும் இணைந்து இயந்திரத்தின் உதவியுடன் 24.05.2021 அவ்விடத்தை தோண்டும் பணிகளில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகலாள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் தோண்டுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

சவக்காலையின் கல்லறைகளுக்கு அருகில் தோண்டப்பட்டபோதிலும் எவ்வித வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லையென படையினர் தெரிவித்தனர்.
சுமார் இரண்டு மணிநேரமாக சவக்காலையின் பல இடங்கள் தோண்டப்பட்டன. எனினும் எவ்வித தடயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

புதியது பழையவை