கல்முனை வாழ் தமிழ் மக்களின் நியாயமான நீதியான ஏற்றுக்கொள்ளக் கூடிய கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக இன்று 03-05-2021 ம் திகதி கௌரவ அமைச்சர் சமல்ராஜபக்ஸ அவர்களுடன் எமது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் பேச்சுவார்த்தை

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டிய நியாயத்தை எடுத்துக் கூறி தேவையான ஆவணங்களையும் எழுத்து மூலம் சமர்ப்பித்து இன்று கௌரவ அமைச்சர் சமல்ராஜபக்ஸ அவர்களுடன் எமது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கடந்த காலம் முதல் பல முன்னெடுப்புக்களை பல விமர்சனங்களையும் தாண்டி முன்னெடுத்து வந்த ராஜாங்க அமைச்சர் அவர்கள் முதன் முதலில் மட்டக்களப்பில் பல ஜனநாயக மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னேடுத்தவர் பாராளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களின் போதும் பிரதேச செயலகம் தொடர்பான விவாதங்களிலும் ஈடுபட்டவர்.

உள்ளேயும் , வெளியேயும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.அதன் படி தொடர்ந்தும் கௌரவ அமைச்சர் சமல்ராஜபக்ஸ, மற்றும் கௌரவ முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா பொதுஜனபெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளருமான கௌரவ பசில் ராஜபக்ஸ மூலமும் முன்னெடுப்புக்களை செய்துவருகிறார்.

கல்முனை வாழ் தமிழ் மக்களின் நியாயமான நீதியான ஏற்றுக்கொள்ளக் கூடிய கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். அது நிச்சயமாக தற்போதைய அரசாங்கத்தினால் முடியும். கௌரவ பிரதமர் அவர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்குண்டு. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எமது இராஜாங்க அமைச்சரின் பணி முயற்சி தொடரும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
புதியது பழையவை