இந்திய நிறு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சஞ்சய பேட் அவர்களினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லமான அலரி மாளிகையில் வைத்து 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பி.சி.ஆர். இயந்திரமொன்று வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இந்த பி.சி.ஆர். இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
அதற்கமைய பி.சி.ஆர். இயந்திரத்தை சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கமைய தியதலாவ வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு தனியார் துறையிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பை பிரதமர் இதன்போது பாராட்டினார்.