மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு

ஏறாவூர் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் 07 பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செங்கலடி தளவாய் பகுதியில் காணப்படும் தனியார் காணியொன்றில் நேற்று மாலை 5 மணியளவில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள மணல் சுழற்சி பண்ணைக்கு அருகில் அமைந்துள்ள நீர் வடிந்தோடும் கால்வாயினுள் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.

 மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை