வடக்கில்-மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

பளை காவல்நிலைய பிரிவிற்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் நேற்று (11) கண்ணிவெடி பிரிவினர் பணியில் ஈடுபட்டிருந்த போது சீருடைகள், பழைய வெடிபொருட்கள் மற்றும் மனித எச்சங்கள் என்பன இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின்னரே மேலதிக அகழ்வுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த ஆண்டும் சீருடைகள் மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை