களுத்துறை – அளுத்கம தொடருந்து நிலையத்திற்கு அருகில் சிறுவனொருவன் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த தொடருந்தில் குறித்த சிறுவன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தர்காநகரைச் சேர்ந்த 9 வயதான சிறுவன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அளுத்கம தொடருந்து நிலையத்திலிருந்து குறித்த தொடருந்து புறப்படத் தயாரானபோது, கடவையில் மறுபுறத்தில் இருந்த பெற்றோர், தம்மிடம் வருமாறு சிறுவனை அழைத்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த சிறுவன் பெற்றோரிடம் செல்ல முற்பட்டபோது, தண்டவாளத்தில் தவறி வீழ்ந்ததையடுத்து, தொடருந்தில் மோதுண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.