குழந்தையை ஆற்றில் வீசிய கிராம அதிகாரி கைது

பொல்காவெல உடபொல பிரதேசத்தில் யானை ஒன்று ஆற்றில் குளிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 8 வயது குழந்தையை தூக்கி அதே ஆற்றில் வீசிய உடபொல கிராம அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரின் நடவடிக்கையினால் எலும்பு முறிந்த நிலையில் குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆற்றில் யானை குளிப்பதை கரையிலிருந்து குழந்தை பார்த்துக் கொண்டிருந்த போது, ​​அவ்வழியாக சென்ற சந்தேக நபர் குழந்தையை தூக்கி யானை இருந்த இடத்திற்கு வீசியதாக தெரிவிக்கப்படுகிறது .

சம்பவம் தொடர்பில் குழந்தையின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் (54) வயதுடையவர் எனவும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை