மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் மோட்டார் குண்டுகள் அடங்கிய வெடிப்பொருட்கள் சிலவற்றினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மீட்பு நடவடிக்கை நேற்று புதன்கிழமை (09-11-2022) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்று அவற்றினை மீட்டுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது ரி-81 ரக மோட்டார் குண்டுகள் 20 மீடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
2 இரும்பு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மீட்க்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பொருட்டு வாழைச்சேனை பொலிசார் ஊடாக வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியினை நாடியுள்ளனர்.