துருக்கிக்கு அவசரமாக விரையும் இலங்கை மீட்புப்படை



துருக்கியில் சிரியாவின் எல்லை பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

இதற்கமைய,இலங்கை மீட்புப்படை நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்கள் தொடர்பான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க துருக்கி புறப்படவுள்ளது.
புதியது பழையவை