இலங்கை இராணுவத்தின் 24 வது படைப்பிரிவு தலைமையகத்துக்குள் நுழைந்த ஊடகவியலாளர்கள்!



நடந்தது என்ன? ஏன் உட்புகுந்தார்கள்?


சுலைமான் நாசிறூனின் ஒருங்கிணைப்பில், இலங்கை இராணுவத்தின் 24வது படைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான கருத்தாடல் அம்பாறை 24 வது படைப் பிரிவின் கட்டளைத் தலைமையகத்தில் இன்று (11-11-2023) இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடக கருத்தாடலில், இலங்கை இராணுவ ஊடக ஆலோசகர் சிசிர விஜயசிங்க, 18 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் களு ஆராய்ச்சி உட்பட இராணுவ உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.


இலங்கை ராணுவத்தின் ஊடக ஆலோசகர் சிசிர விஜயசிங்க இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

இன்று சில ஊடகவியலாளர்கள் அரசியலுக்கு விலை போய் உள்ளனர். குறிப்பாக அண்மைக்காலமாக பல்லூடகம் - டிஜிட்டல் ஊடகங்கள் தங்களுக்குச் சார்ந்த அரசியல்வாதிகளையும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சியையும், அவர்களின் அரசியலையும் நியாயப்படுத்தும் நிலைக்கு விலை போய்விட்டனர். இது நடுநிலையான ஊடகவியலுக்கு பொருத்தமற்றதாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


அரசியல் சார்ந்த ஊடகவியல் என்பது மிகப்பெரும் ஆபத்தானதாகும். இன்று சர்வதேச ரீதியிலான ஊடக அறிக்கையிடலில் குறிப்பாக இஸ்ரவேல் - பலஸ்தீன மோதல் குறித்த செய்திகள் வெளிவருகின்றபோதும் அதிகமான உண்மைகள் மூடி மறைக்கப்பட்ட நிலையிலேயே அவைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் உண்மையை வெளியிடாது தெரிவுபடுத்தப்பட்ட செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றனர்.

ஆனால் ஊடகவியலாளர்கள் நிலைமை அறிந்து செயல்படுகின்றவர்களாக, பொறுப்பு மிக்கவராக கஷ்டத்திலுள்ள மக்களை மேலும் கஷ்ட நிலைமைக்குள் தள்ளிவிடாது அவர்களை ஆற்றுப்படுத்துகின்ற, அவர்களது கஷ்ட நிலைமைக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கின்றவர்களாக தனது பணியை மேற்கொள்ளுதல் வேண்டும்.

ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை கடைப்பிடித்து செயற்படுகின்ற பொறுப்பு மிக்கவர்களாக இருத்தல் அவசியமாகும். ஊடகவியலாளர்கள் வெளியிடுகின்ற செய்திகள் யாவும் ஒரு சட்ட ரீதியான தன்மைக்குள் உள்வாங்கப்படுகின்றது. அந்தச் செய்திகள் சிலவேளைகளில் சாதகமாகவும், சிலவேளை பாதகமாகவும் அமையலாம். குறித்த செய்திகள் பிரசுரமானதும் அச்செய்திகளுக்கு பொறுப்பு கூறவேண்டிய பாரிய பொறுப்பும் அவரேயே சாரும்.

சில செய்தியாளர்கள் உண்மையை திரிவுபடுத்தி வெளியிடுகின்றனர். இதனை தவிர்ந்துகொள்ளல் அவசியமானதாகும். இவ்வாறு செய்வதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாத போக்கை கடைப்பிடிக்க முடியும் என்றார்.

இதில் மட்டுப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் மட்டுமே இக்கருத்தாடலுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை