மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 56 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை



மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 56 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு, மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 176
மாணவர்களில் 56 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும், 19 மாணவர்கள் 8 ஏ பி சித்திகளையும், 17 மாணவர்கள் 7 ஏ 2பி சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு, மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். 

இவ்வாறு சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவர்களையும் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்க நிகழ்வு பாடசாலையில் இடம் பெற்றது.

நிகழ்வில் பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலை பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை