மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளது



மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடலில் புதன்கிழமை மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். 

இந்நிலையில் அப்பொருள் வியாழக்கிழமை (28.12.2023) காலை கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றர்.

இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பினாலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இதனை களுவாஞ்சிகுடி பொலிசாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை