மட்டக்களப்பு - தன்னாமுனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!



மட்டக்களப்பு - தன்னாமுனை பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி - சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுள்ளார.

மேலும் விபத்தில் குழந்தை, பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது.


மேலும், EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அவசர கோரிக்கையொன்றும் விடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை