கடற்றொழிலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு!



பலப்பிட்டி கடல் பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் இரு கடற்றொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து இன்று (28-05-2024) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடற்றொழிலாளர்களின் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது பலத்த அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


இரண்டு பிள்ளைகளின் தந்தை
இதன்போது படகில் இருந்த மூன்று பேரும் கடலில் விழுந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நீந்தி கரையை அடைந்துள்ளார்.


இந்நிலையில் ஏனைய இருவரும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதக் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் , ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.

பலப்பிட்டிய விஜேராம மாவத்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான ஏரல் நிஷாந்த டி சில்வா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் டி சில்வா என்பவரே காணாமல் போயுள்ளார்.
புதியது பழையவை