அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!



சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளை தொடருமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு
அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையமும் உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புதியது பழையவை