சிங்கப்பூரில் காவல்துறையில் கடமையாற்ற முதல் தொகுதி இலங்கையர்கள் அனுப்பி வைப்பு!




சிங்கப்பூரில் துணை காவல்துறை அதிகாரிகளாக பணியாற்ற 16 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் அவர்களை முதல் தொகுதியாளர்களாக சிங்கப்பூருக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளதாக அறிவித்தது.

துணை காவல்துறை என்பது சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களால் பணியமர்த்தப்படும் பாதுகாப்புக் காவலர்கள், நாட்டின் காவல்துறைக்கு ஆதரவாக உள்ளனர்.


வெளிநாட்டில் இலங்கை பிரஜைகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு இந்த மைல்கல் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை