மூத்த ஊடகவியலாளர் இராசநாயகம் பாரதி இன்று (09/02/2025 )ஆம் திகதி மாலை காலமானார்.
62, அகவையில் இன்று இறைபதம் அடைந்தார் மிகவும் நேர்மையாகவும், துணிச்சலாகவும், செய்திகளையும், ஆய்வு கட்டுரைகளையும் உள்ளூர், வெளிநாடு ஊடகங்களில் பல ஆக்கங்களை வெளிக்கொணர்ந்தவல்.
1987 ல், இலங்கை இந்திய ஓப்பந்ததுக்கு பின்னர் இந்திய படை காலம். முரசொலி பத்திரிகையில் செய்தி ஆசிரியராக வேலை செய்த காலத்தில் வெலி ஓயா சிங்கள குடியேற்றத்தை பார்வையிட விடுதலைப்புலிகளால் 35, ஊடகவியலாளர்களை பேருந்தில் அழைத்து சென்ற வேளையில் முருகண்டியில் பேருந்து விபத்துக்குள்ளானது (பஸ் புரண்டது) அதனால் சிலர் ஊடகவியலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. பாரதிக்கு வலது கை முற்றாக பாதிக்கப்பட்டது.
அதனூடாக இன்றுவரையும் ஊடகபணியை செய்துவந்தார்.
இவர் மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர் இவருடைய சகோதரர் பரதன் என்பவர் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பகுதியில் பொறுப்பாளராக பணியாற்றினார்.
தந்தையார் இராசநாயகம் அவர்கள் ஒரு தமிழ் அறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.