வவுனியா கூமாங்குளத்தில் பொதுமக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு(11-07-2025) பொலிஸார் ஒருவரை துரத்தி சென்றவேளையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அப்பகுதியில் சூழ்ந்துகொண்ட மக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை தோற்றப்பெற்றுள்ளது.
இந்த பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.