செம்மணி மனித புதைகுழி அகழ்வை நேரில் சென்று பார்வையிட்ட சிறிதரன் எம்.பி



செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் (01-08-2025)நேரில் சென்று பார்வையிட்டார்.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில், கட்டம் கட்டமாக 35 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரை 118 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 105 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை