அம்பாறையில் பஸ்ஸிடன் மோதிய முச்சக்கரவண்டி தாயும் மகனும் உயிரிழப்பு.!

அம்பாறை,தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (17.12.2025) இடம்பெற்றுள்ளது.
 
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 33 வயதுடைய பெண்ணும் அவரது 2 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். 
 
குறித்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பயணித்துள்ளனர். 
 
விபத்தில் தந்தை மற்றும் இரண்டாவது மகன் ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை