190 நாடுகளை பின்தள்ளி முதலிடம் பிடித்தது இலங்கை



190 நாடுகள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வரிசையில் இருக்கின்ற போதிலும், இலங்கைக்கு இந்தியா முன்னுரிமை வழங்கியுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு, அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியது.

இலங்கைக்கு மிக விரைவில் எஸ்டா செனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த தடுப்பூசியின் பெறுமதி 3 முதல் 4 அமெரிக்க டொலர் வரை உள்ளது.

மிகவும் இலாபமாக இந்த பெறுமதியை கொண்ட தடுப்பூசியே தற்போது காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், சீனாவினால் 3 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும்.

எனினும், தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைக்கும் வரை தாம் பொறுமையாக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவுள்ளது.

எனினும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் தடுப்பூசிகள் நாட்டிற்கு எப்போது கிடைக்கும் என்பது இன்னும் நிச்சயமற்றே காணப்படுகின்றது.

மார்ச் மாதம் நடுப்பகுதி அல்லது மார்ச் மாதம் இறுதிக்குள் இந்த தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கும் என தனக்கு அறிய கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவிததார்.

இவ்வாறான நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 3 வகையிலான கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளது

இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த தடுப்பூசியானது, சிறியளவிலான பாதுகாப்பு மாத்திரமே என கூறிய அவர், சுகாதார தரப்பினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை