விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் காணிகளை வழங்குவதற்காக, காணி வங்கியொன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சமல் ராஜபக்ஸ இதனைக் கூறியுள்ளார்.
பொருளாதார, புனர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
