விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!




பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலத்துறுவெல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் சிக்கிய இரு பிள்ளைகளின் தந்தையான (37) வயதுடைய பீ.எம்.விஜயரெத்தின என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த 25ம் திகதி தனது பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு தனது வீடு திரும்பிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அடித்துச்சென்றதில் படுகாயமடைந்த நிலையில் மகா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்ட்டு சிகிச்சையழிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (27) திகதி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் கௌரவ ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பதியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை