நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சையின்றி அவதி


நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை வசதியின்றி வீடுகளில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்கள் மற்றும் மத்தியநிலையங்களில் காணப்படும் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக 4 ஆயிரத்து 752 பேர் இவ்வாறு வீடுகளில் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை நாட்டின் மாவட்டங்களுக்கிடையில் உள்ள வைத்தியசாலைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

இதனிடையே கொரோனா தொற்றாளர்களுக்க சிகிச்சை வழங்குவதற்கு எதிர்வரும் 3 அல்லது 4 நாட்களுக்குள் ஐயாயிரம் படுக்கைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
புதியது பழையவை