யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு



மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் இரவு வயல்காவலுக்கு சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொன்னுதுத்துரை கெளரிதரன் 52 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காக்கி உயிரிழந்தவராவார்.
சடலம் செங்கலடி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை மனித பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில் பல உயிர் இழப்புகளும் தொடர்கதையாக சம்பவித்த வண்ணமே உள்ளது
புதியது பழையவை