இலங்கைப் பிரதமரை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர்!


இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லமான அலரி மாளிகையில் இன்று 07-06-2021ஆம் திகதி சந்தித்துப் பேசியுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் நிலையிலும், அமெரிக்காலின் அவசரகால உதவிப் பொருள்கள் நாட்டை வந்த நிலையிலும்இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
புதியது பழையவை