மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேலிருந்து வாவியில் குதித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களால் காப்பாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று 23-06-2021ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் களுதாவளை பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம்-பிரபாகரன் 32 வயதுடைய இரு பிள்ளைகளின் குடும்பஸ்தரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பாலத்தின் அருகில் நின்று கொண்டுவந்த பை,பாதணி என்பவற்றை கழற்றி வைத்து விட்டு பாலத்தின் மேலிருந்து வாவிக்குள் குதித்துள்ளார்.
இதன்போது அந்த பகுதியில் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக இளைஞரைக் காப்பாறி மட்டு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.