யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசனை சந்தித்தார்.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக நேற்று முன் தினம் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்மாவட்ட அரசாங்க அதிபருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பை மேற்கொண்டார்.
குறித்த சந்திப்பின் பின் இராணுவ தளபதியினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு நினைவுப் பரிசில் கையளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) சு.முரளிதரன் , மற்றும் இராணுவத்தின் பலாலி இராணுவ கட்டளை தலைமையக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.குறித்த சந்திப்பின் போது தற்போதைய கொரோனா நிலைமைகள், யாழ் மாவட்ட அபவிருத்தி நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
