கரடியனாறு கொரோனா வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவு தொடர்பில் விசனம்

கரடியனாறு கொரோனா வைத்தியசாலைக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு தொடர்பில் அங்குள்ளவர்கள் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கு மதிய உணவாக சோறு , ஒரு மீன் , கோவாச்சுண்டல் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.

அத்துடன் காலை உணவாக புட்டு , முட்டை, குழம்பு சொதி வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதேவேளை மூன்று நேர உணவுக்குமாக அரசாங்கம் 750/- ஒதுக்கியுள்ள நிலையில் நோயாளிகளுக்கு வழங்க்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதோடு அங்கு இருப்பவர்கள் ஒன்றும் குற்றவாளிகள் இல்லை என்றும், எனவே நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் இந்த உணவு தொடர்பில் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



புதியது பழையவை