திருகோணமலை காவல்துறை பிரிவுகளுக்கு முச்சக்கர வண்டிகள் பகிர்ந்தளிப்பு


இலங்கை அரசாங்கத்தினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை திருகோணமலை காவல் துறை பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (19) திருகோணமலை தலைமையக காவல்துறை நிலையத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் உதய ஹேமந்த, திருகோணமலை பிராந்திய காவல்துறை அத்தியட்சகர் பிரஸன்ன பிராத்மனகே ஆகியோர் பங்கேற்று இலங்கை அரசினால் திருகோணமலை மாவட்டத்திற்காக முதற்கட்டமாக வழங்கப்பட்ட 14 முச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அவர்கள் குறித்த முச்சக்கரவண்டிகள் அனைத்தும் கிராமப் பகுதி காவல்துறை நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகைதில் பாரிய வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் பயணம் செய்ய இயலாத பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறித்த வாகனங்களை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்த அவர் இதனை தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக உபயோகித்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்துகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
புதியது பழையவை