விவசாயிகளுக்கு சேதனைப்பசளை பயன்பாடுகள் குறித்த தெளிவூட்டல்கள் வழங்கல்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவினரால் இன்று 09-07-2021ஆம் திகதி களுமுந்தன் வெளி கிராமத்தில் சேதனைப்பசளை தயாரிப்பு மற்றும் பாவனை முறை தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.

விவசாயப் போதனாசிரியர் ப.சகாப்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சேதனைப்பசளை பயன்பாடுகள், குறித்த தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டதுடன் விவசாயிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து கலந்துரையாடல்களும் இடமபெற்றன.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயவலயம்-தெற்குக்குப் பொறுப்பான உதவி விவசாயப் பணிப்பாளர் மேகராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

புதியது பழையவை