நாட்டில் மேலும் 186 கோவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்று மேலும் 186 கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,790 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி,30 வயதுக்கு கீழ் 04 மரணங்களும், 30 முதல் 59 வயது வரையிலான 35 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 147 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இதற்கமைய நேற்று உயிரிழந்தவர்களில்75 பெண்களும், 11 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
புதியது பழையவை