மட்டு-களுவாஞ்சிகுடி பொலிசாரால் கை குண்டுடன் ஒருவரை கைது செய்தனர்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வைத்து கைகுண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

விநாயகபுரம் அம்பாறையை சேர்ந்த வியாஜராச பிரசாந்தன் எனும் 34 வயது மதிக்க தக்க இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் .

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போதே இன்று (13)காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்வரிடம் இருந்து 1 கைகுண்டும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்ற பட்டத்துடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை