சீனாவை நோக்கி விரையும் இந்திய யுத்தகப்பல்கள் இலங்கைக்கு ஆபத்து?

இந்தியா தனது நான்கு யுத்தக் கப்பல்களை தென் சீனக் கடற்பகுதிக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சுமார் இரண்டு மாதங்கள் வரை அந்த யுத்தக்கப்பல்கள் தென்சீனக் கடற்பரப்பில் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

இந்தியாவின் யுத்தக்கப்பல்கள் தென் சீனக் கடற்பரப்பிற்கு அனுபப்பட்டால், இந்தியாவுக்கு சீனாவுக்கும் இடையில் இருந்துவருகின்ற முரன்பாடுகள் மேலும் அதிகமாகும் என்று எச்சரிக்கின்றார்கள் போரியல் நோக்கர்கள்.
இலங்கையில் தனது கால்களைப் பரப்புவதன் ஊடாக இந்தியாவின் தென் பகுதியை தனது கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டுவருவதற்கான சீனாவின் நகர்வுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் திடீரென்று சீனாவின் தென் கடலுக்கு தனது போர்க்கப்பல்களை அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளது இந்தியா.
இந்தியாவின் Guided missile destroyer மற்றும் Missile frigate ரக போர்க் கப்பல்கள் உட்பட நான்கு போர்க் கப்பல்களை தாம் தென் சீனக் கடற்பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த உள்ளதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா ஒஸ்ரேலியா மற்றும் ஜப்பான் போன்றனவற்றின் கடற்படைகளுடன் இணைந்து இந்தியப் போர்க்கப்பல்கள் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
புதியது பழையவை